Published : 20 Aug 2020 08:02 AM
Last Updated : 20 Aug 2020 08:02 AM

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங். தலைவராக பிரியங்கா வலியுறுத்தல்

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு புதிய தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வேண்டும். இந்த விஷயத்தில் ராகுல் காந்தியுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. புதியதாக வரக் கூடிய தலைவர் என்னை அந்தமான் தீவுக்கோ அல்லது உத்தரபிரதேசத்துக்கோ கட்சிப் பணிக்கு அனுப்பினாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனது கணவர் ராபர்ட் வதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எனக்கு வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x