Last Updated : 19 Aug, 2020 12:05 PM

 

Published : 19 Aug 2020 12:05 PM
Last Updated : 19 Aug 2020 12:05 PM

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 20 லட்சத்துக்கு மேல் அதிகரிப்பு; உயிரிழப்பு 52 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 64 ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 27 லட்சத்து 67 ஆயிர்தது 273 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டியுள்ள நிலையில் 12 நாட்களில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுதல் தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 73.63 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 76 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கரோனா எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 92 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 52 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.91 ஆகச் சரிந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 422 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 132 பேர், தமிழகத்தில் 121 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் 88 பேர், உத்தரப்பிரதேசத்தில் 70 பேர், மேற்கு வங்கத்தில் 55 பேர், பஞ்சாபில் 35 பேர், குஜராத்தில் 20 பேர், மத்தியப்பிரதேசம், ஜம்முகாஷ்மீரில் தலா 13 பேர், டெல்லி, ஜார்க்கண்டில் தலா 12 பேர், ராஜஸ்தானில் 11பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா மற்றும் புதுச்சேரியில் தலா 9 பேர், பிஹார், சத்தீஸ்கர், தெலங்கானாவில் தலா 8 பேர், ஹரியாணாவில் 7 பேர், அசாம், கேரளா, உத்தரகாண்டில் தலா 6 பேர், கோவாவில் 5 பேர், லடாக், திரிபுராவில் தலா 3 பேர், அந்தமான்நிகோபர் தீவுகள், சிக்கிம், மணிப்பூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, ஒட்டுமொத்தமா 3 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 782 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை மட்டும் 8 லட்சத்து ஆயிரத்ு 518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 422 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 20ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 56ஆயிரத்து 920 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 121 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 860பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 11 ஆயிரத்து 068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,226ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். 20 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,820ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 79,798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 139 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,201 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 16,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x