Published : 18 Aug 2020 02:22 PM
Last Updated : 18 Aug 2020 02:22 PM

கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றம்

கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக், இடம் மாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக், இடம் மாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, தனது பொறுப்புகளுடன், கோவா ஆளுநரின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார்
மேலே குறிப்பிட்ட நியமனங்கள் அவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x