Published : 16 Aug 2020 01:11 PM
Last Updated : 16 Aug 2020 01:11 PM

‘‘பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ - அபிஜித் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 84 வயதாகும் அவரது உடல் பலவீனமாக உள்ளது.

பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஏற்பட்ட ரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சை முடிந்தது இருப்பினும் கரோனா தொற்று காரணமாக பிரணாப்பின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் முகர்ஜி

இந்தநிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கூறியதாவது:

எனது தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை முன்பு இருந்ததை விட சற்று பரவாயில்லை. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம்.’’ எனக் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x