Last Updated : 09 Sep, 2015 09:18 AM

 

Published : 09 Sep 2015 09:18 AM
Last Updated : 09 Sep 2015 09:18 AM

வெளிநாடு செல்லும் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு: கூடுதலாக 1 மாதத்துக்கு மேல் தங்கினால் பதவி நீக்கம் - புதிய விதிகளை இறுதி செய்கிறது மத்திய அரசு

அரசுப் பணிக்காக வெளிநாடு செல் லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி 1 மாதத் துக்கு மேல் அங்கு கூடுதலாக தங்கினால் இனி அவர்கள் தங்கள் பதவியை இழப்பார்கள்.

இதற்கான புதிய விதிமுறை களை மத்திய அரசு இறுதிசெய்து வருகிறது.

அரசுப் பணி மற்றும் கல்வி விடுப்பில் வெளிநாடு செல்லும் அதிகாரிகளில் சிலர், அனுமதிக்கப் பட்ட காலம் முடிந்தவுடன் நாடு திரும்புவதில்லை. இவர்கள் விடுப்புக் கடிதம் அனுப்பி விட்டு, அதற்கு அரசின் ஒப்புதலை பெறாமலேயே அங்கு கூடுதலாக தங்குவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு அரசின் அனுமதி பெறாமல் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு மாநில அரசுகள் நோட்டீஸ் அனுப்பலாம். இதற்கு அவர் பதில் அளிக்காவிட்டாலோ அல்லது அவர் பணியில் சேராவிட்டாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கருதி, அவரை பணியில் விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.

மாநில அரசுகள் 2 மாதங்களுக்குள் தங்கள் பரிந்துரையை அனுப்பாவிடில், அந்த அதிகாரி ராஜினாமா செய்துவிட்டதாக கருதி மத்திய அரசே அவரை பதவியில் இருந்து விடுவிக்கும்.

மத்தியப் பணியாளர் நலத் துறையின் புதிய வரைவு விதிகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்திய வனத்துறை பணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

தற்போது 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இதுபோல் அரசின் ஒப்புதல் இல்லாத விடுப்பில் இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x