Last Updated : 11 Aug, 2020 04:43 PM

 

Published : 11 Aug 2020 04:43 PM
Last Updated : 11 Aug 2020 04:43 PM

பள்ளிகளை நடத்த திறமை இல்லையெனில் எங்களிடம் கொடுங்கள்:  பாஜகவுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சவால்

டெல்லியில் பாஜக ஆளும் 3 நகராட்சிகளில் நடத்தப்படும் நகராட்சிப் பள்ளிகளை பாஜகவினரால் நடத்த முடியவில்லை எனில் எங்களிடம் கொடுங்கள், டெல்லி அரசு எடுத்து நடத்தும் என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன.

“எம்சிடி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு ஒழுங்காகப் புத்தகங்களும் வழங்கப்படுவதில்லை என்று எங்களுக்கு தொடர்ச்சியாகப் புகார்கள் வருகின்றன.

பாஜக அவற்றை நடத்த திறனில்லை என்றால் எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் நடத்திக் காட்டுகிறோம். முறையாக நடத்திக் காட்டுகிறோம்.

ஆனால் பாஜக முதலில் தங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x