Published : 11 Aug 2020 08:23 AM
Last Updated : 11 Aug 2020 08:23 AM

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 91 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் காவிரி, லக்ஷ்மண தீர்த்தம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் மழை சற்று குறைந்ததால், மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283 அடியாக உள்ளது. விநாடிக்கு 41 ஆயிரத்து 676 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 18 ஆயிரத்து 292 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 77 ஆயிரத்து 950 கனஅடி நீர் வரும் நிலையில், விநாடிக்கு 73 ஆயிரத்து 342 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு இதே அளவு நீர்வரத்து தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு விநாடிக்கு 91 ஆயிரத்து 563 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சன்கூடு, தலக்காடு, மண்டியா, ரங்கப்பட்டணா உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரா.வினோத்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x