Last Updated : 10 Aug, 2020 11:46 AM

 

Published : 10 Aug 2020 11:46 AM
Last Updated : 10 Aug 2020 11:46 AM

இந்தியாவில் கரோனாவிலிருந்து 15 லட்சம் பேர் குணமடைந்தனர்: 22 லட்சமாக தொற்று அதிகரிப்பு; 44 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா தொற்று எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 62 ஆயிரத்து 64 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஆறுதல் தரும் விதமாக கரோனாவிலிருந்து நேற்று ஒரேநாளில் 54 ஆயிரத்து 859 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்து 35 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 69.33 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் சதவீதம் 2 ஆகக் குறைந்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 390 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 119 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,111 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 147 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,652 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 80,981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 107 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,198 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 12,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x