மணிப்பூர் பாஜக அரசுக்கு எதிராக காங். நம்பிக்கையில்லா தீர்மானம்

மணிப்பூர் பாஜக அரசுக்கு எதிராக காங். நம்பிக்கையில்லா தீர்மானம்
Updated on
1 min read

மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 3 பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. 10-ம் தேதியன்று காலை சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை கட்சி எடுத்துள்ள முடிவின்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in