Published : 07 Aug 2020 08:00 AM
Last Updated : 07 Aug 2020 08:00 AM

கரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

புதுடெல்லி

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர்களின் மெய்நிகர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தொடக்கத்தில் இருந்தே கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தரம்மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஜனவரியில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பாகவே மக்களுக்கு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது.

ஜனவரி 18 முதல், நாட்டின் 4 முக்கிய விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளை பரிசோதிக்கக் தொடங்கினோம். மார்ச் 6 முதல் அனைத்து பயணிகளும் பல்வேறு விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மார்ச் 22 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் கடுமையான பொது முடக்கம் மார்ச் 25-ல் அமலுக்கு வந்தது.

இந்தியா, மக்கள் தொகை மிகுந்த நாடு. ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கையை மிகக் குறைவாக வைத்திருக்க முடிந்தது. இவ்வாறு ஹர்ஷ் வர்தன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x