Published : 07 Aug 2020 07:50 AM
Last Updated : 07 Aug 2020 07:50 AM

ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது அமலாக்கத் துறை

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த மாதம் 5-ம் தேதி வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, அமலாக்கத் துறை சார்பிலும் அண்மையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் ஆகிய 3 பேரை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர்களை காவலில் எடுத்துள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x