Published : 06 Aug 2020 12:58 PM
Last Updated : 06 Aug 2020 12:58 PM

24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத மழை 

மும்பை

தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் அதாவது இந்தப் பகுதி கேட் வே ஆஃப் இந்தியாவிலிருந்து தொடங்கும் பகுதியாகும், இங்கு 1974ம் ஆண்டுக்குப் பிறகு பேய்மழை கொட்டித் தீர்த்தது.

புயற்காற்று மணிக்கு 107கிமீ வேகத்தில் வீசியது. புறநகர் ரயில்சேவை, பஸ் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகின.

புதன் கிழமையன்று கொலாபாவில் பதிவான மொத்த மழை அளவு 331.8 மிமீ.

மும்பையில் ஏற்கெனவே பெய்ய வேண்டிய பருவ மழையில் ஆகஸ்ட் முதல் 5 நாட்களில் மட்டும் 64% மழையைப் பெற்று விட்டது. தெற்கு மும்பை பகுதிதான் இதன் கொடுமையை அனுபவித்து வருகிறது. சாந்தாகுரூஸில் 162.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றுடன் கனமழை பெய்யுமென்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x