Published : 06 Aug 2020 08:21 AM
Last Updated : 06 Aug 2020 08:21 AM
அயோத்தியில் பூமி பூஜை நடந்ததை முன்னிட்டு அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டார்.
அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டு பூஜையறையில் பாரம்பரிய முறைப்படி கோலமிட்டு அந்தக் கோலத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
தனது பதிவில் நிர்மலா சீதாராமன், "வீடுகளில் தினமும் புதிதாக அரிசி மாவில் கோலமிடுவார்கள். இந்தக் கோலம் இன்று எனது வீட்டில் சிறிய கோயில் போன்ற பூஜையறையில் இடப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், கோலத்துக்கு மேலே சம்ஸ்கிருதத்தில் ராமஜெயம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT