Published : 05 Aug 2020 05:17 PM
Last Updated : 05 Aug 2020 05:17 PM
கரோனா பாதிப்பில் இருந்து ஒரு நாளில் அதிக அளவு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,706-ஐ இந்தியா எட்டியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தொற்று நோயாளிகள் அதாவது 51,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணம் அடைந்தவர்களின் விகிதம் 67.19 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,82,215-ஆக அதிகரித்துள்ளது. இது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, இரண்டு மடங்கு அதிகம்.
கடந்த 14 நாட்களில் மட்டும் குணமடைந்தவர்களின் விகிதம் 63.8%. தொடர்ச்சியாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், குணமடைந்தவர்களுக்கும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்குமானை இடைவெளி 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாள்தோறும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 5,86,244 ஆகக் குறைந்துள்ளது (நேற்றைய எண்ணிக்கை 5,86,298). அனைத்து நோயாளிகளும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்திய “பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை” என்ற உத்தியாலும், தொடர் நடவடிக்கைகளாலும், கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. இந்தத் தொற்றினால் உயிரிழக்கும் விகிதம், உலக
நாடுகளுடன் ஒப்பிடும் போது இ்ந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. இது இன்று 2.09 சதவீதமாக உள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT