Published : 05 Aug 2020 08:26 AM
Last Updated : 05 Aug 2020 08:26 AM

ராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா வாழ்த்து

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை, தேசிய ஒற்றுமைக்கான விழா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்நிலையில், ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், "எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார். ராமர் மற்றும் சீதையின் அருளால், ராமர் கோயிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வுக்கான விழாவாக மாறியுள்ளது" என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில் பல ஆண்டுகளாக ராமஜென்ம பூமி பிரச்சினை தொடர்பாக கலவரங்கள் நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x