Published : 04 Aug 2020 06:11 PM
Last Updated : 04 Aug 2020 06:11 PM
கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா உடல் நிலை சீராக உள்ளது, ஆனால் சித்தராமையாவுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
எடியூரப்பா உடல் சிகிச்சைக்கு நன்றாக வினையாற்றுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எடியூரப்பா, சித்தராமையா இருவருமே மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை மருத்துவர்களுடன் கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு பேசினார்.
எடியூரப்பா மற்றும் அவரது மகள், மற்றும் அவர் அலுவலகத்தைச் சேர்ந்த 6 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று பரவியது தெரியவந்தது.
சித்தராமையாவுக்குக் கரோனா என்று தெரிந்தவுடன் திங்கள் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்குக் காய்ச்சல் அதிகமாக உள்ளது.
இவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமப்ப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT