Published : 04 Aug 2020 08:24 AM
Last Updated : 04 Aug 2020 08:24 AM

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக இ-ரக்‌ஷா பந்தன் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேபல்லியில் ரக் ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர்.படம்: பிடிஐ

அமராவதி

ஆந்திராவில் பெண்கள் இணையவழி குற்றங்களால் (சைபர் கிரைம்) பாதிக்கப்படுவதை தடுக்கும் விதத்தில், இ-ரக்‌ஷா பந்தன் திட்டத்தைஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அமராவதியில் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்புக்காக இந்த அரசு அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு ‘திஷா’ திட்டத்தின் மூலம் மிகக்குறைந்த நாட்களிலேயே தண்டனையை பெற்று தருகி றோம்.

இத்திட்டத்தில் மாநில காவல் துறை மற்றும் சிஐஇ போலீஸார் இணைந்து பங்கேற்க உள்ளனர். இதனால், பெண்களுக்கு எதிராக இணையவழி குற்றச் செயலில் ஈடுபடுவோரை நாம் உடனடியாக கண்டுகொள்ளலாம். எளிதாக அவர்களின் வலைகளில் விழாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கு இந்த திட்டம் வெகுவாக உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x