Published : 04 Aug 2020 08:20 AM
Last Updated : 04 Aug 2020 08:20 AM
ரக் ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், “நான் எனது அண்ணனுடன் வசித்த காலத்தில் அன்பு, உண்மை மற்றும் பொறுமையை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இத்தகைய சகோதரன் எனக்கு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். இத்துடன் ராகுலுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தன்னை பின்தொடரும் 1.54 கோடி பேருக்கு நேற்று ரக் ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதில் அவரும் தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் ராகுல் மற்றும் பிரியங்காவின் பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT