Published : 02 Aug 2020 07:16 AM
Last Updated : 02 Aug 2020 07:16 AM

தாயும், மகனும் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பாரமதியைச் சேர்ந்தவர் பிரதீப் குராவ் (39). இவரது மனைவி பேபி குராவ் (36). இவர்களது மகன் சதானந்த் (16) கடந்த மார்ச்சில் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வை எழுதினார். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த பேபியும் இம்முறை 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதியிருந்தார்.

தேர்வு முடிவுகள் கடந்த 29-ம்தேதி வெளியாயின. இதில்பேபி குராவ் 64.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அவரது மகன் சதானந்த் 73.20 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தாயும், மகனும் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பலர் நேரடியாக இவர்களது வீட்டுக்கு வந்து பேபி குராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து பேபி குராவ் கூறும்போது, “எனக்கு படிப்பதற்கு மிகவும் விருப்பம். ஆனால் சிறு வயதிலேயே எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். என் விருப்பத்தைக் கணவரிடம் தெரிவித்தேன். அவரும் என்னை ஊக்குவித்து தேர்வு எழுத விண்ணப்பித்தார். அவருடைய ஊக்கத்தால் இரவு நேரங்களிலும் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தொடர்ந்து படிக்க விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x