Last Updated : 31 Jul, 2020 12:01 PM

 

Published : 31 Jul 2020 12:01 PM
Last Updated : 31 Jul 2020 12:01 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று: 2 நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 78 பேர் புதிதாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தப் பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 ஆயிரத்து 78 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 16 லட்சத்து 38 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் 15 லட்சம் இருந்த நிலையில் இன்று பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுதல் தரும்விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 57 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. குணமடையும் சதவீதம் 64.54 ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 266 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 97 பேர், கர்நாடகத்தில் 83 பேர், ஆந்திராவில் 68 பேர், உத்தரப் பிரதேசத்தில் 57 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 46 பேர், டெல்லியில் 29 பேர், குஜராத்தில் 22 பேர், ஜம்மு காஷ்மீரில் 17 பேர், மத்தியப் பிரதேசத்தில் 14பேர், ராஜஸ்தான், தெலங்கானாவில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் 10 பேர், பஞ்சாப்பில் 9 பேர், ஜார்க்கண்டில் 5 பேர், பிஹார், ஹரியாணா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகியவற்றில் தலா 5 பேர், கோவா, சத்தீஸ்கரில் தலா 3 பேர், அசாம், அந்தமான் நிகோபர் தீவுகளில் தலா 2 பேர், கேரளா, லடாக், புதுச்சேரியில் தலா ஒருவர் உயிரிழந்தனர். மணிப்பூரில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 266 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 97 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் 10 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,936 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 13 ஆயிரத்து 793 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 69,708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 83 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,230 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 10,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x