Published : 30 Jul 2020 06:50 AM
Last Updated : 30 Jul 2020 06:50 AM

புகை பிடிப்போருக்கு கரோனாவால் ஆபத்து

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுவாசம், வாய் வழியாக கரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்படுகிறது. புகை பிடிப்போரின் விரல்கள் அடிக்கடி உதடுகளை தொடும். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்றக் கூடும். பைப், ஹுக்காவை பயன்படுத்தும் போது வைரஸ் தொற்று ஏற்படும்.

தொடர்ச்சியான புகை பழக்கத்தால் நோய் எதிர்ப்புசக்தி குறைவாகவே இருக்கும். அவர்களை கரோனா வைரஸ் எளிதில் தொற்றும். வைரஸ் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x