Published : 29 Jul 2020 08:50 PM
Last Updated : 29 Jul 2020 08:50 PM

கேரளத்தில் இன்று 903 பேருக்குக் கரோனா: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்றைய பரிசோதனையில் 903 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கேரளாவில் இன்றைய பரிசோதனையில் 903 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்பு மற்றும் அறியப்படாத தொடர்புகளின் மூலம் 706 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் 71 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். அதில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. அவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான குட்டி ஹாசன். கரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 68 ஆக உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 213 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 87 பேர், கொல்லம் மாவட்டத்தில் 84 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 83 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 67 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 54 பேர், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 49 பேர், வயநாடு மாவட்டத்தில் 43 பேர், கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 42 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 38 பேர், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 31 பேர், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறியப்படாத தொடர்பு மூலம் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா 10 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரும், கொல்லம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் திருச்சூர் மாவட்டத்தில் இரண்டு கே.எஸ்.இ ஊழியர்கள் மற்றும் ஒரு கே.எல்.எஃப் ஊழியர் உள்ளனர்.

இதுவரை 11,369 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 146 நோயாளிகள், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 126 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 58 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 56 பேர், பத்தனம் திட்டா மாவட்டத்தில் 41 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 36 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 35 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 34 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 30 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 28 பேர் , இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 19 பேர், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், கண்ணூர் மாவட்டத்தில் மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10,350 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 1,47,132 பேர், வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலில் 1,37,075 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,057 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,475 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 23,924 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,33,413 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 7,037 மாதிரிகளின் முடிவுகள் காத்திருக்கின்றன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதாரப் பணியாளர்கள், விருந்தினர் தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூகத் தொடர்பு கொண்ட நபர்கள் உள்ளிட்ட முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 1,19,019 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் 1,14,666 மாதிரிகள் எந்த தொற்று நோயும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டன.

19 புதிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன மற்றும் 13 இடங்கள் விலக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 492 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x