Published : 28 Jul 2020 04:06 PM
Last Updated : 28 Jul 2020 04:06 PM

மகிழ்ச்சியான செய்தி; மும்பையில் குறையும் கரோனா தொற்று: ஆதித்ய தாக்கரே ட்வீட்

மும்பையில் கரோனா தொற்று குறைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி என மகாராஷ்டிர அமைச்சரும், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது. மும்பையை பொறுத்தவரை கடந்த 100 நாட்களாகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது அங்கு கரோனா பரவல் குறைந்து வருகிறது. 24 மணிநேரத்தில் நடந்த சோதனையில் 700 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘மகிழ்ச்சியான செய்தி. மும்பையில் இன்று 700 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமானோருக்கு ஏறக்குறைய 8776 பேருக்கு கரோனா பரிசோதனை நடந்தபோதிலும் குறைவான பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு நிம்மதி ஏற்பட்டுள்ளது. எனினும் கட்டுப்பாடுகளை விலக்கி விட வேண்டாம். முககவசத்தையும் விட்டு வேண்டாம். எண்ணிக்கையை மட்டுமே நாம் குறைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x