Published : 25 Jul 2020 08:50 AM
Last Updated : 25 Jul 2020 08:50 AM

ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துங்கள்: டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி அளித்த வங்கி

ராஜ்குமார்

சண்டிகர்

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் பரவி வந்ததால் தனது டீக்கடையை மூடிவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். தனது வாழ்வாதாராம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு ராஜ்குமார் அண்மையில் விண்ணப்பித்தார்.

இந்நிலையில், அவரது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். ராஜ்குமார் ரூ.50 கோடி கடன் வாங்கிவிட்டு அதை செலுத்தவில்லை என்றும், அதை முதலில் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், அது சமூக வலைதளங்களில் ராஜ்குமாரின் படத்துடன் வைரலாகியுள்ளது. மேலும் ரூ.50 கோடி கேட்டு வங்கி அனுப்பிய நோட்டீஸும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x