Published : 21 Jul 2020 08:04 PM
Last Updated : 21 Jul 2020 08:04 PM

அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து: காஷ்மீர் அரசு அறிவிப்பு

கோப்புப் படம்

ஸ்ரீநகர்

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் முர்மு அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் மாதம்தொடங்கும். எனினும், கரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாத்திரை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் காஷ்மீர் தலைமைச் செயலர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் ஜம்முவில் ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் நடந்து வரும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஜூலை மாத இறுதியில் அமர்நாத் யாத்திரையை தொடங்க அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் முர்மு அறிவித்துள்ளார். நாடுமுழுவதும் கரோனா பரவி வரும் சூழலில் தற்போதைய சூழலில் அமர்நாத் யாத்திரை நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆளுநர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x