Published : 21 Jul 2020 08:17 AM
Last Updated : 21 Jul 2020 08:17 AM

மேற்கு வங்க பெண் தீவிரவாதி வங்கதேசத்தில் கைது: தண்டிக்க தாய் வேண்டுகோள்

கொல்கத்தா

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தஆயிஷா ஜன்னத் மோஹோனா அண்மையில் கைது செய்யப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் தானியாகாலி பகுதியைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் பிரக்யா தேவ்நாத். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, தீவிரவாத குழுக்களில் சேர்க்க ஆள் திரட்டியது, பணம்திரட்டியது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டதாக ஆயிஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தானியாகாலி பகுதியில் வசிக்கும் அவரது தாயார் கீதா நேற்று கூறும்போது, “2016-ம்ஆண்டு ஆயிஷா வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச்ஆப் ஆகியிருந்தது. பின்னர்போலீஸில் புகார் கொடுத்தோம்.சில நாட்கள் கழித்து எனக்கு போன் வந்தது. அதில் பேசிய பிரக்யா தான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துவிட்டதாகவும், வங்கதேசத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் அந்த எண்ணை தொடர்புகொண்ட போதும் கிடைக்கவில்லை.

அவர் இங்கு இருந்தபோது தானியாகாலியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். அவருக்குள் எப்படி தீவிரவாத எண்ணம்வந்தது என்று தெரியவில்லை. அவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது எனக்குப் பிடிக்கவில்லை. என் மகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x