Published : 17 Jul 2020 07:57 AM
Last Updated : 17 Jul 2020 07:57 AM

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகள் 50 பேரிடம் கருத்துகளை கேட்டார் மோடி

புதுடெல்லி

நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக அவர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். பொருளாதாரத்தை விரைவாக மீட்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்குத் தேவையான கருத்துகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் நீடித்தது. நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போதைய சூழலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பிரதமருக்கு எடுத்துக் காட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பொருளாதார ஆலோசனைக் கவுன்சில், நிதித்துறை முதன்மை பொருளாதார செயலர், நிதி ஆயோக் ஆலோசகர் ஆகியோருடன் 3 தனித்தனிகூட்டங்களை நடத்தி ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார் பிரதமர்.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடந்த மே மாதம் மத்திய அரசு ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. பொருளாதார மீட்சிக்காக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக செயல்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x