Last Updated : 16 Jul, 2020 08:58 AM

 

Published : 16 Jul 2020 08:58 AM
Last Updated : 16 Jul 2020 08:58 AM

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான 2-வது தடுப்பு மருந்து; மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை தொடங்கியது


கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் சைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பிரசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பாரத் பயோடெக் நிறுவனம் கிளிக்கல் பரிசோதனையை தொடங்கியுள்ள நிலையில், மனிதர்களான மீதான பரிசோதனை நடத்தும் 2-வது நிறுவனம் ஜைடல் கேடில்லா நிறுவனமாகும்.

கிளினிக்கல் பரிசோதனையில் முதல் கட்டம் மற்றும் 2-வது கட்டத்தை ஆயிரத்து 48 பேர் மீது பரிசோதிக்க ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதத் தொடக்கத்தில் அனுமதியளித்தது. இதன்படி இந்த கிளினிக்கல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கிளினிக்கல் பரிசோதனை முயற்சியின்படி இரு கட்டங்களாக மருந்தின் தன்மை பரிசோதிக்கப்படும். முதல் கட்டமாக நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களைத் தேர்வு செய்யும். இதில் பெண்கள் பாலூட்டும் தாய்களாகவோ, கர்ப்பிணிகளாக இருக்கக்கூடாது.

இந்த மருந்து பரிசோதனைக்கு வரும் தன்னார்வலர்கள் உடலில் மருந்தை செலுத்தக்கொள்ளவும், அதன்பின் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும்போது 18 வயது நிரம்பியவர்களாக இருந்தால் அவர்களிடம் மருந்து நிறுவனம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும், 18 வயது நிரம்பாதவர்களாக இருந்தால் அவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனை 84 வரையிலும், 2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனை அதிகபட்சமாக 224 நாட்கள் வரையிலும் நடத்தப்படும்.

இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வர்கள் 4 வாரங்களுக்குள் உடலில் எந்தவிதமான நோய் தொற்றும், காய்ச்சல்(38 டிகிரி முதல் 100.4 பாரன்ஹீட்) வந்திருக்கக்கூடாது. கடந்த 14 நாட்களுக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்தல், கரோனா நோயால் பாதிக்கப்படுதல், கரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி பரிசோதனையில் பாஸிட்டிவ் வருதல், கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ஏதாவது கிளிக்கல் பரிசோதனையில் பங்கேற்று இருத்தல் போன்றவை அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், மஞ்சள்காமாலை சி,பி வகைகளில் பாதிக்கப்படாமல் இருத்தல், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், நாள்ஒன்றுக்கு 10 சிகரெட்டுக்கும் அதிகமாக புகைக்காதவர்கள் போன்றவர்கள் மட்டுமே கிளிக்கல் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x