இணையதள குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பு: மத்திய அரசு திட்டம்

இணையதள குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பு: மத்திய அரசு திட்டம்
Updated on
1 min read

சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இணையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்கள் வெளியாவதை தடுப்பது இதன் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இணைய குற்றங்களை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராய மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. “குழந்தைகள், பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இணைய குற்றங்கள் களையப்பட வேண்டும். குழந் தைகள், பெண்களின் ஆபாச படங்கள், தகவல்களுடன் இணைய தளங்கள் உள்ள னவா என தொடர்ந்து கண் காணிப்பதுடன் அவை உடனுக் குடன் முடக்கப்படவும் வேண்டும்.

இதற்கு தொடர்புடைய சட்டங் களை வலுப்படுத்த வேண்டும். இணையத்தில் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய இணைய குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (ஐசி4) என்ற பெயரில் ரூ.400 கோடி செலவில் அதிநவீன இணைய குற்றங்கள் தடுப்பு மையத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in