Published : 15 Jul 2020 08:24 AM
Last Updated : 15 Jul 2020 08:24 AM

பெங்களூருவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

பெங்களூரு

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 41 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் கர்நாடக தலைமை செயலர் விஜய் பாஸ்கர் விடுத்த அறிக்கையில், “பெங்களூரு நகர மற்றும் புறநகர் மாவட்டங்களில் 14-ம் தேதி இரவு 8 மணி முதல் 22-ம் தேதி காலை 5 மணி வரை 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது.

ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும். மளிகை, காய்கறி, பழம் மற்றும் இறைச்சி கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, வாடகை கார்கள் இயங்காது. அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x