Published : 13 Jul 2020 08:12 AM
Last Updated : 13 Jul 2020 08:12 AM

பட்டப்படிப்பு முடிக்கும் மாணவிகளுக்கு பாஸ்போர்ட்

சண்டிகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது:

மாணவர்கள் போக்குவரத்து விதிகளை அறிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும். மாநிலத்தில் பல்வேறுகல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

பெண் கல்வியை மாநில அரசுஊக்குவிக்கிறது. பெண்கள் பட்டப்படிப்பு படித்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றவேண்டும். இதற்காக பட்டப்படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட்டும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x