Published : 11 Jul 2020 01:59 PM
Last Updated : 11 Jul 2020 01:59 PM

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி;  இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல: அசோக் கெலாட் வேதனை

ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது. இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:

‘‘கரோனா வைரஸுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கொடி பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முயலுகிறோம். ஆனால் ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது. இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பாஜக மிக மோசமாக மாறி விட்டது. மதத்தை பயன்படுத்தி பெருமையையும், பிரிவுகளை உருவாக்க முயலுகிறார்கள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x