Published : 11 Jul 2020 08:06 AM
Last Updated : 11 Jul 2020 08:06 AM

தலைமை செயலக கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள புகழ்பெற்ற தலை மைச் செயலகத்தை இடித்து விட்டு ரூ.400 கோடியில் புதிய கட்டிடம் கட்ட தெலங்கானா முதல் வர் கே.சந்திரசேகர ராவ் தீர்மானித் தார். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஆனால், நிஜாம் மன்னர் கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிட மும் இதில் உள்ளதால், இது மிகவும் பழமை வாய்ந்தது எனக் கூறி இதை இடிக்க தடை விதிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதற்கிடையே, தலைமைச் செயல கத்தில் 9 தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. இதில் ஒன்று நிஜாம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட தாகும். இதனை காரணம் காட்டி, இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட நீதிமன்றத்தில் அனுமதியும் பெற்றது தெலங்கானா அரசு. இதை அடுத்து 6 லட்சம் சதுர அடியில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x