Published : 18 Sep 2015 09:30 AM
Last Updated : 18 Sep 2015 09:30 AM
மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டி சாய்பாபா கோயிலில் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த முறை திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்கெனவே நடை முறையில் உள்ளது. நாசிக்கில் நடைபெற்று வரும் கும்பமேளா விழா முடிந்த பிறகு, ஷிர்டி சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் திருப்பதி மற்றும் வைஷ்ணவ தேவி கோயில்களுக்கு சென்று இந்த முறை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என அறக்கட்டளையின் செயல் அதிகாரி பஜிராவ் ஷிண்டே தெரிவித்தார். இதுதொடர்பான அறிக்கை தயார் செய்து அறக்கட்டளையின் 3 நபர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பிறகு இதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT