Published : 06 Jul 2020 03:11 PM
Last Updated : 06 Jul 2020 03:11 PM

நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலாக செயலாற்றியவர் சியாம் பிரசாத் முகர்ஜி: பிரதமர் மோடி புகழாரம்

சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதா ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை பாஜகவினர் இன்று நாடுமுழுவதும் கொண்டாடுகின்றனர். குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். உணர்வுமிக்க நாட்டுப்பற்றாளரான அவர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உன்னதமான பங்காற்றியுள்ளார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிக்கின்றன” என்று பிரதமர் கூறியுள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இன்று சியாம் பிரசாத் முகர்ஜி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனசங்கமே பின்பு பாரதிய ஜனதாவாக மாறியது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x