இந்தியாவில்  ஒரேநாளில் 24,850 பேருக்குக் கரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,082; மரணமடைந்தோர் 613- சுகாதார அமைச்சகம்

இந்தியாவில்  ஒரேநாளில் 24,850 பேருக்குக் கரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,082; மரணமடைந்தோர் 613- சுகாதார அமைச்சகம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,850 பேருக்கு புதிதாக பாசிட்டிவ் ஆனதால் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 613 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 19,628 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 20,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 2, 44, 814 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

அதாவது மொத்தம் 60.77% நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக மரணமடைந்த 613 பேரில் மகாராஷ்ட்ராவில் 295 பேரும், டெல்லியில் 81 பேரும் தமிழ்நாட்டில் 65 பேரும், கர்நாடகாவில் 42 பேரும், உ.பி.யில் 24 பேரும், குஜராத்தில் 21 பேரும், மேற்கு வங்கத்தில் 19 பேரும் ஆந்திராவில் 12 பேரும் பிஹாரில் 9 பேரும் ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், ஹரியாணா, ம.பி, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முறையே 5 பேரும், கோவா, ஜார்கண்ட், மாநிலங்களில் முறையே 2 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவரும் பலியாகினர்.

6.7 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை நெருங்கியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு இந்தியா வரும் என தெரிகிறது.

இந்தியாவில் ஜூலை 4-ல் மட்டும் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்த்து மொத்தம் 97,89,066 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in