Published : 04 Jul 2020 07:36 PM
Last Updated : 04 Jul 2020 07:36 PM

ரூ.8200  கோடி செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரமாண்ட சாலை: 3 மாநிலங்களை இணைக்கும் சம்பல் எக்ஸ்பிரஸ் திட்டம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

8250 கோடி ரூபாய் செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு ம.பி., உ.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக பிரமாண்ட சாலையமைக்கும் சம்பல் எக்ஸ்பிரஸ் திட்டம் செயல்படுத்தபடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி இன்று மத்தியப்பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடன் காணொலி காட்சி மூலம், முன்மொழியப்பட்ட சம்பல் எக்ஸ்பிரஸ் திட்டத்தை ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய போது,. கட்கரி. திட்டத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக விரைவான சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ராயல்டி, உள்ளூர் வரி விலக்குகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினார்.

சீரான போக்குவரத்து மற்றும் பொருள்கள் விநியோகம் தவிர, இந்தத் திட்டம் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பின் தங்கிய பிராந்திய மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கோடிட்டுக் காட்டினார். தொழில்துறை மற்றும் வணிகத்தொகுப்பு வளாகங்களைத் தவிர, நெடுஞ்சாலையின் இருபுறமும் சீர்மிகு நகரங்கள், மண்டிகள், கைவினை பொருள்களின் விற்பனை நிலையங்கள் (Hunar haats) போன்ற சாத்தியமான வசதிகளுக்காக விரைவில் நிலம் கையகப்படுத்துதல் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் கட்கரி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் நிறைவேறும் பகுதிகளின் மாவட்டங்களின் அருகிலுள்ளோருக்கு பெரும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் வழியாக செல்லும் 8200 கோடி ரூபாய் திட்டம் பிந்தை கோட்டாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இது கோல்டன் நாற்கரத்தின் டெல்லி-கொல்கத்தா தாழ்வாரம், வடக்கு-தெற்கு நடைபாதை, கிழக்கு-மேற்கு நடைபாதை மற்றும் டெல்லி-மும்பை-எக்ஸ்பிரஸ்வே ஆகியவற்றின் குறுக்கே இணைப்பை ஏற்படுத்தும்.

திட்டத்தின் செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், திட்டப்பொருள்களுக்கான ராயல்டி மற்றும் வரி விலக்கு 1000 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x