Last Updated : 04 Jul, 2020 12:26 PM

 

Published : 04 Jul 2020 12:26 PM
Last Updated : 04 Jul 2020 12:26 PM

உ.பி அமைச்சர், மனைவிக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேச மாநிஅல் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், இவரது மனைவி ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சரும், அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உ.பி. உலக நாடுகளை விடவும் பிரமாதமாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டியது பலதரப்பட்ட கருத்துகளை ஈர்த்துள்ள நிலையில் அங்கு அமைச்சர் குடும்பத்துக்கே கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தான் நன்றாகவே இருப்பதாக ராஜேந்திர பிரதாப் சிங் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.

“நான் நன்றாக இருக்கிறேன், வெள்ளிக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் கூறும் அறிவுரையை பின்பற்றுவேன்.” என்றார்.

பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பட்டி தொகுதியில் இவர் 4 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 371 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x