Last Updated : 04 Jul, 2020 08:22 AM

 

Published : 04 Jul 2020 08:22 AM
Last Updated : 04 Jul 2020 08:22 AM

பெங்களூருவில் கரோனா தொற்றால் இறந்தவர்களை புதைக்க 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல கரோனா தொற்றால் இறந்தவர்களை புதைக்கவும் இடம் கிடைக்காத நிலை உள்ளது.

கர்நாடகாவில் நேற்று மாலைநிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பெல்லாரியில் கரோனா நோயால் உயிரிழந்த 9 பேரை ஒரே குழியில் அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே கர்நாடக அரசு, கரோனா நோயால் உயிரிழப்போரை அடக்கம் செய்யமாவட்டம்தோறும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிலம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு, வருவாய்த் துறை அமைச்சர் அசோக் ஆகியோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருமாவட்ட ஆட்சியர் ஜி.என்.ஷிவமூர்த்தி கூறும்போது, “பெங்களூருவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை அடக்கம் செய்ய நகருக்கு ஒதுக்குப்புறமாக 35.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 4 வட்டங்களில் இந்த நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x