

டெல்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
அண்மைக்காலமாக ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, சத்தீஸ்கர் என கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்தநிலையில் ஹரியாணாவின் தென்மேற்கே 63 கி.மீ. தொலைவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது.
இதன் தொடர்ச்சியாக டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் அல்வார் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.7 ஆக பதிவானது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
முன்னதாக மிசோரமின் சம்பால் பகுதியில் இன்று மதியம் 2.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.