Published : 03 Jul 2020 09:03 AM
Last Updated : 03 Jul 2020 09:03 AM

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் 28 புதிய அமைச்சர்கள் நேற்று இணைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 நவம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. இந்நிலையில் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கட்சியின் நீண்டகாலத் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் பதவி விலகினர். இதனால் கமல்நாத் அரசு பெரும்பாண்மை இழந்து கவிழ்ந்தது. பின்னர் 22 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

இதையடுத்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 23-ம் தேதி பதவியேற்றது. அப்போது சவுகான் மட்டுமே முதல்வராக பதவியேற்றார். பிறகு பாஜகவைச் சேர்ந்த மூவர், சிந்தியா ஆதரவாளர்கள் இருவர் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், ம.பி. அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் கணிசமானோர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். அமைச்சர் பதவிக்கு முதல்வர் சவுகான் பரிந்துரைத்த பலரின் பெயரை கட்சி மேலிடம் ஏற்கவில்லை. இதனை சவுகான் நேற்று முன்தினம் மறைமுகமாக குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x