Published : 03 Jul 2020 09:00 AM
Last Updated : 03 Jul 2020 09:00 AM
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி நேற்று ஆஜரானார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து வைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 19-வது நபராக அவர் ஆஜராகியுள்ளார். இனி வரும் நாட்களில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராவார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT