Published : 27 Jun 2020 07:35 AM
Last Updated : 27 Jun 2020 07:35 AM
ஹரியாணாவில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. இதில், அதிலிருந்த வீரர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
ஹரியாணாவின் பானிபட், கர்னால் உள்ளிட்ட வட நகரங்களில் இருந்து டெல்லியை கிழக்குப் புறமாக கடந்து செல்ல, குண்ட்லி – காசியாபாத் - பல்வல் இடையே அதிவிரைவு நெடுஞ்சாலை (கேஜிஎப் எக்ஸ்பிரஸ் வே) அமைக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மற்றும் உ.பி. வழியாக இந்த 6 வழிச் சாலை செல்கிறது. இந்நிலையில், ஹரியாணாவின் கேஜிஎப் அதிவிரைவு சாலையில் சோனிபட்டில் இருந்து 10 -12 கி.மீ. தொலைவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் அனைத்து வாகனங்களும் அங்கு விரைந்தன. போலீஸாரும் அங்கு விரைந்து சென்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய பகுதியில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தினர்.
இதையடுத்து இந்திய விமானப்படை பொறியாளர்கள் அங்கு வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் அந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT