Published : 26 Jun 2020 10:18 PM
Last Updated : 26 Jun 2020 10:18 PM

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5000 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 5 லட்சத்தை கடந்துள்ளது.

ஒரேநாளில் கரோனா பாதிப்பு 17,000 ஆக அதிகரித்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இன்று சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 463 ஆக அதிகரிக்க, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆகவே இதுவரை 58.24% நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு காரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டடோர் மொத்த எண்ணிக்கை 1,52,765 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக டெல்லியில் இன்று ஒரே நாளில் 3460 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 77,240 ஆக அதிகரித்துள்ளது.

அதுபோலவே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் அமெரிக்கா பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x