Published : 26 Jun 2020 09:01 PM
Last Updated : 26 Jun 2020 09:01 PM

டெல்லியில் பள்ளிகள் திறப்பு ஜூலை 31-ம் தேதி வரை தள்ளிவைப்பு

புதுடெல்லி

டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படுவது ஜூலை 31-ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுவதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் இயல்பான சூழல் இன்னும் உருவாகவில்லை.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லியில் பள்ளிகள் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்படும் என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். டெல்லயில் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழல் தற்போது இல்லாததால் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x