Published : 26 Jun 2020 08:45 PM
Last Updated : 26 Jun 2020 08:45 PM

கேரளாவில் ராணுவப் பணியாளர்களுக்கும் கரோனா: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று புதிதாய் 150 பேரிடம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''கேரளாவில் இன்று புதிதாய் 150 பேரிடம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 21 பேர், கோட்டயம் மாவட்டத்தில் இருந்து 18 பேர், மலப்புரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் தலா 16 பேர், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 9 பேர், திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து தலா 7 பேர், வயநாடு மாவட்டத்தில் 5 பேர், பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் தலா 2 பேருக்கு இன்று புதிதாய்க் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று கரோனா பாசிட்டிவ் வந்தவர்களில் கண்ணூர் மாவட்டத்தில் 6 சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் மற்றும் 3 ராணுவ டி.எஸ்.சி கேன்டீன் ஊழியர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிஐஎஸ்எஃப் பணியாளர்களில் இருவர் விமான நிலையப் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 91 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள். (குவைத் - 50, சவுதி அரேபியா - 15, யுஏஇ - 14, கத்தார் - 6, ஓமன் - 4, இலங்கை - 1 & இத்தாலி - 1) பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 48 பேர் (மகாராஷ்டிரா -15, டெல்லி -11, தமிழ்நாடு -10, ஹரியாணா -6, கர்நாடகா -2, உத்தரப் பிரதேசம் -1, தெலங்கானா -1, ஜம்மு காஷ்மீர் -1 & மத்தியப் பிரதேசம் -1).

தொடர்பு மூலம் 10 பேர், (அவர்கள்: திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5 பேர், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கோட்டயம், மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒருவர்). தவிர பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார ஊழியருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் 18 பேர், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர், கொல்லம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 10 பேர், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர், கோட்டயம் மாவட்டத்தில் இருவர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று சிகிச்சையில் இருந்து நோய்த் தொற்றில் மீண்டவர்கள். இதுவரை 2,006 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 1,846 நோயாளிகள் இன்னும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் உள்ளனர்''.

இவ்வாறு ஷைலஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x