Published : 26 Jun 2020 01:57 PM
Last Updated : 26 Jun 2020 01:57 PM

மகாராஷ்டிராவில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் இல்லை: முந்தைய தேர்வுகள் அடிப்படையில் பட்டம் வழங்க நடவடிக்கை

மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் பல மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கரோனா தொற்று வேகம் அதிகமாக உள்ளது. மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாவது:

மகாாரஷ்டிராவில் கரோனா பரவல் வேகம் தொடர்ந்து இருப்பதால் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை. கலை மற்றும் அறிவியல் வகுப்புகளுக்கு மட்டுமின்றி மருத்துவம் உட்பட புரபஷனல் வகுப்புகளுக்கும் இதுவே தான் நிலை.

எனவே இறுதித் தேர்வுகள் நடத்தாமலேயே மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளோம். இதற்காக செயல் திட்டத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x