Published : 24 Jun 2020 10:15 PM
Last Updated : 24 Jun 2020 10:15 PM

மேற்கு வங்கத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு வரும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்ட பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது மாநில அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x