Published : 23 Jun 2020 07:50 PM
Last Updated : 23 Jun 2020 07:50 PM

ரயில்களில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்பு முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண தொகையை திருப்பியளிக்க ரயில்வே முடிவு

புதுடெல்லி

வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு, 2020 ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ, பதிவு செய்த அனைத்து பயணச் சீட்டுகளுக்கும், ரயில்வேத் துறை கட்டணத் தொகையை முழுமையாக திருப்பித்தரவுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் விரைவு,பயணிகள், மின்சார ரயில்களின் சேவை ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் முதல்கட்டமாக 215 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதில் பயணம் செய்யலட்சக்கணக்கான மக்கள்டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் 2020 ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ, வழக்கமாக இயக்கப்படும் அட்டவணை ரயில்களுக்காக பதிவு செய்த அனைத்து பயணச் சீட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கான கட்டணத் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x