Published : 21 Jun 2020 07:29 AM
Last Updated : 21 Jun 2020 07:29 AM

ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

அமராவதி

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெலங்கானா, தமிழகத்தில்10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால், ஆந்திராவில் கண்டிப்பாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்விஅமைச்சர் ஆதிமூலபு சுரேஷ்கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினரும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலபு சுரேஷ் அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கரோனா பரவலால் மாணவ, மாணவியரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதனால் 6.3 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.

இவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்துவிரைவில் இவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான கிரேடுகள் அறிவிக்கப்படும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x